Monday, October 20, 2008

முரண்பாடு முரண்படுமா?


செயலுக்குப் பின்னால் கனவு
வழி தெரியாக் காட்டில் எதிரி கூடாரத்தின் தூரத்து ஒளி 
பிதற்றதலின் தத்துவம் தத்துவத்தின் பிதற்றல்
வாழ்நாள் முழுவதும் சாதகம் இறப்பில் அரங்கேற்றம்.
பாலங்கள், இணைப்பின் அடையாளம் பிரிவின் நினைவுறுத்தல்.
கடவுள்தன்மை கைப்படும். ஆனாலும் கடவுள் தேடல்.
முரண்பாடு முரண்படுமா?

No comments: